புதிய paper கவிதைகள் – தேவதை

கேட்டது வரம்.
கிடைத்தது தேவதை.

இருக்கிற தேவதைக்காக
இல்லாத சாமிகளையும் கும்பிடலாம்.

தேவதையைக் காணவில்லை.
கண்டுபிடிக்க வருவோருக்குத்
தக்க தண்டனை வழங்கப்படும்.

என்ன கேட்பது?
ஏதாவது வரம் கேளேன்
என்று உருகும் தேவதையிடம்.

பி. கு: மார்கழிக் கோலம் போட தேவதை வருகிறாள்… 🙂 அவளுக்குக் காத்திருந்தது போலவே அவளுக்கான கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்…

நீ கடல் நான் நதி (பழைய paper கவிதைகள்)

நீ கடல் நான் நதி
உன்னைத் தேடி நான் வருவேன்.

நீ கடல் நான் நதி
உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும்.

நீ கடல் நான் நதி
உன்னைச் சேரும் வழி நானறிவேன்.

நீ கடல் நான் நதி
என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன்.

நீ கடல் நான் நதி
யாருக்கு யார் பிறந்தோம்?

நீ கடல் நான் நதி
நான் உனைச் சேர வழிவிட்டொதுங்கும் ஊரு.

நீ கடல் நான் நதி
எனை யாரும் தடுத்தால் ஊரோடு அழிப்பேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேராவிட்டால் என் சுயம் வேறு.

நீ கடல் நான் நதி
உன்னிடம் மட்டும் என்னை இழப்பேன்.

நீ ______ நான் ரவி
உன் மடியில் தான் சாவேன்.

பழைய Paper கவிதைகள் – கனவு !

விழித்துக் கொண்டே இருக்கிறேன்,

கனவுகளில் நீ வரும்போது,

உறங்கிவிடக்கூடாது என்பதற்காக.

உன்னை

நல்ல குடும்பத்துப் பெண் என நினைத்திருந்தேன்.

எப்படி அனுமதிக்கின்றனர் உன் பெற்றோர்?

இப்படி இருட்டிய பின்னும்

கனவில் வர?

கும்மிருட்டு நிரம்ப பயம் எனக்கு.

உன் படுக்கையறை விளக்கை அணைக்காதே.

வருவதாய் இருக்கிறேன் இன்றிரவு,

உன் கனவில்.

உன் ஒன்றுவிட்ட சித்தப்பனுக்கெல்லாம்

பயந்து பயந்து

உன்னை சந்தித்தது போதும்.

கொஞ்சமாவது உறங்கிப் பழகு.

கனவில் வருகிறேன்.

பழைய Paper கவிதைகள் – பிரிவு !

சொல்லாமல் ஊருக்குப் போன நீ

சொல்லிக் கொண்டு

செத்தாவது போயிருக்கலாம்.

உகாண்டாவில் வெயில் அதிகம்.

கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி.

மூன்றாம் உலக நாடுகளில் வறுமை.

எதன் பொருட்டு பார்க்க வந்தேன் என வினவும் உன் அம்மாவிடம்

வேறு என்ன சொல்லச் சொல்கிறாய்?

மனசு வலிக்குதுன்னா?

விரட்ட விரட்டத் திரும்ப வரும்

உன் நாய்க்குட்டியை விட

வெட்கங் கெட்டதாயும்

உண்மையானதாகவும்..

உன் நினைவுகள் !

தாமதமாய் வரும் மழைக்கும் கூட

வலிக்குமோ என பச்சை காக்கும் புல்வெளி

என் நேசம்.

கதீஜா சுஜாதா எல்லாம்

__தா என்றே வாசிக்கிறேன்..

என்ன நினைவு இருக்கக்கூடும் உனக்கு?

ரவிசங்கர் ஓர் இசை மேதை

என்பது தவிர.

காதல் தோல்வியென்றால்

தாடி வளர்ப்பதில் எல்லாம்

உடன்பாடில்லை எனக்கு.

வேண்டுமானால் வளர்க்கலாம்,

மூளையை.

இன்றோ நாளையோ

“அவளோட உன்ன பார்த்தேன்..தொலைச்சுப்புடுவேன் (நாயே)!”

என்றுன்னப்பன் குரைக்கக்கூடும்.

தயாராய்த் தான் இருக்கிறேன்.

நீ

மான்குட்டிக்கும் முயல்குட்டிக்கும் பிறந்தவள்

என்றொருமுறை பிதற்றியதை

நினைத்துச் சிரிக்க.

யாரும் வரும் வரை

தனித்திருப்போம்

நானும் கடற்கரையும்.

உயிரோடு புதைப்பது பெருங்குற்றம்.

தண்டனை மட்டும் கிடையாது.

எந்த நாட்டுப் பெண்களுக்கும்.

கண்ணீர் கட்டி வைக்க

கடல் வெட்டி வைத்தேன்.

கப்பல் விட்டு

வேடிக்கை பார்க்கிறாய் நீ!

பசி தூக்கம் மறந்து

காதல் வளர்க்கிறேன்.

எதை வளர்க்க என்னை மறந்தாய்?

உன்னை குற்றம் சொல்லவும் கூடாது தான்.

ஒரு முறை நீ நினைத்ததற்கே

என் தூக்கம் போனது..

எத்தனை முறை உன்னை நினைத்து இருப்பேன்..

நீ செத்தும் போயிருக்கலாம் !

முதல் சந்தோஷமோ கடைசி துக்கமோ

முதலில் சொல்வேன் உன்னிடம்.

புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சியோ

மகனை இழந்த கண்ணீரோ

உனக்காய் வைத்திருப்பேன்..

எப்பொழுது வருவாய் நீ?

பழைய Paper கவிதைகள் – பூ!

வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்

என்ன செய்யும் பூ

வாடாமல்?

சிகப்போ மஞ்சளோ

ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!

குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் –

என்னோடு சந்தோஷப்பட!