புதிய paper கவிதைகள் – தேவதை

கேட்டது வரம்.
கிடைத்தது தேவதை.

இருக்கிற தேவதைக்காக
இல்லாத சாமிகளையும் கும்பிடலாம்.

தேவதையைக் காணவில்லை.
கண்டுபிடிக்க வருவோருக்குத்
தக்க தண்டனை வழங்கப்படும்.

என்ன கேட்பது?
ஏதாவது வரம் கேளேன்
என்று உருகும் தேவதையிடம்.

பி. கு: மார்கழிக் கோலம் போட தேவதை வருகிறாள்… 🙂 அவளுக்குக் காத்திருந்தது போலவே அவளுக்கான கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்…