ஒழுங்கு மரியாதையாய்
– ஒரு முறை நான் கேட்ட –
உன் பத்தாம் வகுப்புப் புகைப்படத்தையே தந்திருக்கலாம்.
ஒரு நாளுக்கு ஒரு முறையோ பத்து முறையோ
கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்ப்பதில்
ஒரு கஷ்டமும் இருந்திருக்காது எனக்கு.
படிய வாரிய கூந்தலுடன்
ரயிலேறும் வரை நிதானித்த அழகிய மௌனமும்
ஆரத்தழுவிய முத்தத்தில் கலைந்திருக்காது.