முதல் எழுத்து

ஆறு மாதங்களுக்கு முன், நானும் கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று கண்டுபிடித்து மகிழ்ந்ததில் இருந்து, வலைப்பதிவு செய்யும் ஆர்வம் இருந்து வந்தது. இப்பொழுது நேரம் வந்திருக்கிறது.

தமிழ், தமிழ் நாட்டு நிகழ்வுகள், எனக்குப் பிடித்தவை, என்னை பாதித்தவை மற்றும் தற்பொழுது வாழும் நாடான ஜெர்மனியில் என் அனுபவங்கள் குறித்து எழுத ஆவல்.

இவை குறித்து தனித்தனியாக என் நண்பர்களுடன் மின் மடலில் விவாதிப்பதை விட இப்படி வலைப்பதிவது எளிமையாக இருப்பதும் ஒரு காரணம்.

கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டு என்றாலும், அவற்றை இங்கே அச்சிடும் உத்தேசமில்லை. யாராவது அச்சுரிமையைத் திருடிக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது !

தமிழ் மொழி, கணிணித் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்கள், தமிழர் வாழ்க்கை முறை, இந்தியா குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் இடமாக தமிழ்த்தென்றல் அமைய வேன்டும் என்று விரும்புகிறேன். உங்கள் ஆலோசனைகளை, ஊக்க மொழிகளையும் எதிர்பார்க்கிறேன்.

அப்புறம், என்னை எழுதத் தூண்டிய சந்தோஷ் குருவுக்கு நன்றி 🙂

அன்புடன்,
ரவி