கற்றது தமிழ்

தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு,  தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில் ஒரு விழிப்புணர்வு உரையாடல் இவ்வளவு பெரிதாய் நடந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தைப் பார்த்து விமர்சித்தவர்கள், உரையாடியவர்கள் பலரும் படத்தின் இறுதியில் சுட்டிக்காட்டிய விசயங்களை அலசினார்களே தவிர, ஒரு படமாய் இதன் கலைத்திறனை விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. இன்று வரை, இந்தப் படத்தைப் பாருங்கள் என்று எந்தக் காரணத்துக்காகவும் என் நண்பர்களுக்குப் பரிந்துரைக்க இயலவில்லை. படம் அலசும் விசயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். குத்துப் பாட்டு இல்லை, ஆபாசம் இல்லை என்பதற்காக ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லி விட முடியாது. இந்த மாதிரிப் படங்களை “critically acclaimed” என்று ஊடகங்கள் கொஞ்சம் போது எரிச்சலே மிஞ்சுகிறது.

படத்தின் பெரும் குறைகள்:

1.  நேர்க்கோட்டிலேயே கதை சொல்லி இருக்கலாம். முன்னும் பின்னுமாகச் சொல்வது எல்லாம் இயக்குநரின் மேதாவித்தனத்தைக் காட்டத் தான் என்று தோன்றுகிறது.

2. படத்தில் சுட்டிக்காட்டும் முக்கிய விசயங்கள் எல்லாம், முக்கியமாக முடிவுக்கு நெருங்கிய, சமூக ஏற்றத்தாழ்வு குறித்த விசயங்கள் எல்லாம் வசனங்களாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்த வசனம் இல்லை என்றால் இதைத் தான் இயக்குநர் சொல்ல வருகிறார் என்பது ஒருவருக்கும் புரிந்து இருக்காது. இந்த விசயத்தைச் சொல்ல ஒரு சிறந்த மேடைப்பேச்சோ மேடை நாடகமோ போதுமே? 

3. குழப்பமான பாத்திரப் படைப்பு. ஒரு காட்சியில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது போல் இருக்கிறார் நாயகன். அடுத்த காட்சி ஆவேசமாகப் பேசுகிறார். புரட்சிக்காரன் போல் தன் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறார், அப்புறம், என்னத்துக்காக அதைத் தானே காவல் துறையிடம் கொடுத்து விட்டு கிறுக்குத்தனமாகச் செத்துப் போகிறார் என்று புரியவில்லை.

4. குழப்பமான கதை. அன்பும் ஆதரவுமற்ற சிறு வயது, காதல் தோல்வி, சமூக ஏற்றத் தாழ்வு என்று நாயகனின் மனப்பிறழ்வுக்கு பல காரணிகள் இருக்கும் போது குறிப்பிட்ட எந்தக் காரணியின் மீதும் பார்வையாளின் சிந்தனை செல்வது இயலாததாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் துவக்கத்திலேயே ஆனந்தியோ பெற்றோரோ நாயகனுடன் இருந்திருந்தால் அவன் இப்படி ஆகி இருப்பானா என்று நினைப்பதைத் தவிர்க்க இயலாது. மனம் பிறழ்ந்த ஒருவனின் கதையை நாடகத்தனமாகச் சொல்லாமல் சமூகத்தில் பலரைப் போல் இருக்கும் ஒருவனின் கதையை இன்னும் நேர்மையாக உறைக்கும் படிச் சொல்லி இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

தன் வாழ்வில் பார்த்த பலரது நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை என்கிறார் இயக்குநர். சொல்வதானால் ஒருத்தனின் வாழ்வில் உண்மையிலேயே நடந்த கதையைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லலாம். பலரது வாழ்வைக் குழப்பி அடித்து சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்துச் சொதப்பியதாகவே இந்தப் படம் தெரிகிறது.

ஒருவனின் நாய்க்குட்டி சாகிறது, அம்மா சாகிறாள், அப்பா விடுதியில் விட்டு விட்டு இராணுவத்துக்குப் போகிறார், விடுதியில் இருந்த அன்புள்ள தமிழையாவும் இறக்கிறார், காதலித்த பெண் பிரிந்து போகிறாள், காசில்லாத நாயகன் காவலர்களிடம் மாட்டுகிறார், பைத்தியமாகிறார், ஏகப்பட்ட கொலைகள் செய்கிறார், காதலித்த பெண் விலைமாதாகிறாள், திரும்ப சந்தித்து இருவரும் சாகிறார்கள்…uff..இந்தக் கதையை என் நண்பரிடம் சொன்ன போது, ஆள விடுறா சாமி என்று தெறித்து ஓடிவிட்டார் 🙂 படம் ஏன் வணிக ரீதியில் பெரு வெற்றி பெற வில்லை என்று இப்போது புரிகிறது 🙂

அண்மைய தமிழ்த் திரைப்படங்களில் எரிச்சலூட்டும் இன்னொரு போக்கு – காவியப்படுத்தப்படும் சிறு வயது அல்லது பள்ளிக்காலக் காதல். ஏதோ ஓரிரு படத்தில் இப்படி காவியமாக்கிக் காட்டினால் பொறுத்துக் கொள்ளலாம். பல படங்களில் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். இது உண்மையில் நிகழக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கதையையே எடுத்துக்கொண்டால், பிரபாகர் ஆனந்தியை வளர்த்த பிறகு பார்த்திருக்காவிட்டால், ஆனந்தி மேல் இவ்வளவும் பற்றுதலும் பாசமும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனந்தி ஒரு மோசமான மாமனிடம் மாட்டி விலை மாதாக ஆகி இராவிட்டால் பிரபாகர் கூப்பிட்டவுடன் உயிர் உருகி வந்து செத்துப் போய் இருக்க மாட்டாள்.

படத்தின் கலைத்திறம் வேறு, படம் சொல்ல முற்படும் செய்தியின் முக்கியத்துவம் வேறு. அந்த விதத்தில் படம் சொல்ல முற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவாக, ஆழமாக அலசும் அளவுக்கு எனக்கு அறிவு இருப்பதாகத் தோன்றவில்லை 🙂 என்பதால் அது பற்றி ஏதும் எழுதாமல் இருப்பதே நலம்.

—–

நண்பர்கள் சேர்ந்து திரை விமர்சனத்துக்கு என ஒரு கூட்டுப் பதிவு தொடங்கி இருக்கிறோம். பார்க்க – திரை விமர்சனம் . நீங்களும் எங்களுடன் இணைந்து எழுதலாமே?

பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.

இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி ஆகிடுவார். கவனம் தேவை.

தங்கர், சீமான், நரேன்-சிநேகா, ஸ்ரேயா-னு ஏகப்பட்ட புள்ளிகளைச் சுற்றி கதை முன்னும் பின்னுமாக அலைவது அலுப்பூட்டுக்கிறது. இந்த voice over narration உத்தியை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ சேரன், தங்கர் போன்றவர்கள் அதைத் தேவை இல்லா இடங்களில் எல்லாம் பயன்படுத்தி கடுப்பைக் கிளப்புறாங்க. காடு பதுங்குவோமே, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தவிர இந்தப்படத்தில் மூனு பாடல்களுக்குத் தேவையே இல்லை. ஸ்ரேயா பாத்திரம், சின்ன சினேகா-நரேன் duetம் தேவையே இல்லை. கண்ணியமான திரைப்படம் குறித்து பேசும் தங்கர் எதற்கு “தடவித் தடவி” விடலைப் பிள்ளைகளுக்கு ஒரு duet வைக்கணும்? இப்படித் தடவித் தடவிக் காதலைக் காட்டுவதால் சினேகா-நரேன் பிரியும் போது பதைபதைப்போ சேர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ இல்லை. கிளைக் கதைக்கு மேல் கதை வைச்சதால், உண்மையில் பள்ளிக் கூடம் கட்டப்படுமா என்று எல்லாம் படம் பார்க்கிற ஒருவருக்கும் கவலை வராது. தங்கர் சொல்ல விரும்புவதாக நினைக்கும் செய்தியும் போய் சேராது.

என்ன இருந்தாலும், ஒரு சில மண்ணின் மனிதர்களையாவது உண்மை முகத்துடன் காட்டுகிறார் என்பதற்காக மட்டுமே தங்கரின் படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிரீடம் – ok. ஒரு மறை time passக்குப் பார்க்கலாம்.

லியோனார்டோ டிகாப்ரியோவின் அழகு என்ன, நடிப்பு என்ன..ஹ்ம்ம்..தமிழ்நாட்டில் விஜயாகவோ மாதவனாகவோ பிறந்து இருந்தால் நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவர். அநியாயத்துக்கு நான் பார்க்கிற ஆங்கிலப் படத்துல எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு செத்துப் போறார். இல்லாட்டி, சோகமா இருக்கார்.

Black Diamond – இப்படி ஒரு உலகம், மனிதர்கள் இருப்பதே இந்தப் படம் பார்த்து தான் தெரியும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இதுவே இந்தப் படத்தின் வெற்றி தான். சிறுவர்கள் போராளிகளை மாற்றப்படும் சூழல் நடுங்க வைக்குது !

The Departed – எப்படியும் டிகாப்ரியோ தபாலிச்சு வந்திருவாருன்னு பார்த்தா அநியாயமா டப் டப்புன்னு சுட்டுக் கதையை முடிச்சிடுறாங்க. அர்ஜூன், விஜயகாந்த் எல்லாம் இந்தப் படங்களைப் பார்க்க மாட்டாங்களா 😉

The Aviator – The Departed இயக்குனரே இயக்கியது. ஆனால், முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். தமிழில் இப்படி முந்தைய படங்களின் பாதிப்பு இல்லாமல் வேறுபட்டு இயக்குகிறவர்கள் மிகவும் குறைவு. புதியவர்களில் சுசி கணேசனும் லிங்குசாமியும் தான் உடனே நினைவுக்கு வருகிறவர்கள்.

மேலே உள்ள மூனும் டிகாப்ரியோ படங்கள். கண்டிப்பா பார்க்கலாம்.

அடுத்து வரும் இரண்டு படங்களும் பார்க்கப்பட வேண்டியவை தான். Superman, Science fiction வகையறா படங்களைக் காட்டிலும் மனிதர்களை அவர்கள் பலம், பலவீனத்துடன் காட்டும் நிகழ் வாழ்க்கை கதையுடைய படங்கள் பிடித்திருக்கின்றன.

Million dollar baby – நம்ம ஊரு மூத்த நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி பாத்திரங்களில் நடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் !! ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்குமான அறிமுகம், அதைத் தாண்டிய நெகிழ்ச்சியான உறவாக மாறும் விதம் அருமை.

The Pursuit of Happyness – Will Smithம் அவருடைய மகனும் சேர்ந்து கலக்குறாங்க. அமெரிக்காவை அதன் இயல்போடு அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம், உற்சாகமும் முனைப்பும் தர்ற படம்.

மேல உள்ள படங்களை எல்லாம் பார்க்கும்போது தோணுறது ஒன்னு தான். தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாட்டு locationகள், வண்ண வண்ண setகள், ஏய்..ஊய் அலட்டகள், தெய்வீகக் காதல்கள் இதை எல்லாம் தாண்டி வெளிய வந்தா சொல்லப் படக்கூடிய, சொல்லப்பட வேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கு.

Derailed – இந்தப் படத்தைப் பார்க்கவே கொட்டாவி வருது. இதை வேற தமிழ், இந்தில உல்டா பண்ணி எடுக்கத் தோணுச்சோ மக்களுக்கு ! ஆனால், பிரம்மாண்டம் இல்லாமல் குறைந்த நிதியில் சுமாரான படம் எடுக்க இதைப் பார்த்து நம்ம ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.

பொம்மரில்லு – ஆஹா..சூப்பர் படம் ! எப்படியும் நம்ம வீட்டுக்கு வர்ற மக்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி பல காட்சிகள் ஓடப்போகுது..எத்தனை முறை வேணா சலிக்காமப் பார்க்கலாம்னு இருக்கு..தங்கத் தலைவி cute ஜெனிலியாவுக்காக இன்னும் பல முறை பார்க்கலாம். துறு துறு நாயகி வேடத்துக்கு தானைத் தலைவி லைலாவுக்குப் பிறகு ஜெனிலியா தான் முழுப் பொருத்தம். ஆந்திரா மக்களை நாம ஓட்டிக்கிட்டே இருந்த வேலைல அவங்க நல்ல பொழுது போக்குப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல..இது மாதிரி வேற படம் தெரிஞ்சாலும் சொல்லுங்க.. ஆர்யா, கோதாவரி நல்ல திருட்டுப் பதிப்பு கிடைக்காம காத்திருக்க வேண்டியிருக்கு..இந்தப் படத்துக்கு tamiltorrents தளத்துல அருமையான டிவிடி பதிப்பு கிடைக்குது. இந்தப் படம் தமிழ்ல remake raja, ravi சகோதரர்கள் தயாரிப்புல வெளிவர இருக்கு. கண்டிப்பா வெற்றிப் படம் தான். ஜெயம் ரவி கூட remake படத்தில் நடிச்ச சதா, அசின், ஷ்ரேயா, த்ரிஷா-ன்னு எல்லாரும் முன்னணி நடிகைகளா வந்தத நினைக்கையில் ஜெனிலியாவுக்குத் தமிழ்லயும் ஒரு round கிடைக்கும்னு நம்ம பகுத்தறிவு சொல்லுது 🙂

ஒன்னுமில்லாத படத்தை ஊதிப் பெரிசாக்குறதும், நல்ல படத்தை பலரறியச்செய்யாம விட்டுடுறதும் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களுக்கு கை வந்த கலை.

பெரியார் – இதைப் பார்ப்பதற்குப் பதில் “பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்” என்று மணிமேகலைப் பதிப்பக 25 ரூபாய் நூல் ஏதும் இருந்தால் படித்து விட்டுப் போகலாம். காமராஜ் படத்தையும் இப்படித் தான் உப்பு சப்பில்லாமல் எடுத்துக் கவிழ்த்தார்கள். பாரதி படத்தின் 60ஆம் நாளில் கூட black ticket எடுத்துத் தான் பார்த்தோம். பாரதி என்ற ஒரு வரலாற்று நாயகனை வைத்து ரத்தமும் சதையுமாக அப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இரண்டு காரணங்கள் – பெரியார் போன்ற அரசியல் நாயகனின் வாழ்வை அனைத்து அரசியல் கட்சியனருக்கும் திருப்திகரமாக எடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் / மலைப்பு, அரசின் நிதியுதவிக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டியிருப்பது. இப்படி 95 ஆண்டு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடக்க முற்படாமல் அவர் வாழ்வின் முக்கிய கால கட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அவர் பண்பு, முக்கியத்துவம் வெளிப்படுமாறு செய்திருக்கலாம்.

தெளிவான வணிக வடிவத்திலும் இல்லாத இந்தப் படத்தில் பாடல்களைப் புகுத்தி நேரத்தை வீணடித்திருப்பது மன்னிக்க முடியாத பிழை. படத்தின் நடிகர் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். கடைசி வரை சத்யராஜ், மனோரமா, குஷ்பு என்று தான் என்னால் படத்தைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்களை வரலாற்றுப் பாத்திரங்களாகப் பார்க்க இயலவில்லை. மக்கள் மனதில் எந்த அறிமுகமும் இல்லாத நாடக நடிகர்களை வைத்து இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தந்திருக்க முடியும். மதன்பாப், Y.G மகேந்திரன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் என்று quota முறையில் நடிகர்கள் தேர்வு நடந்திருக்கும் போல..அம்பேத்காராக நடித்தவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது போன்ற comedy நடிகர்களையா இப்படி முக்கியமான பாத்திரங்களுக்கத் தேர்ர்வு செய்வது? இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா? 🙁 நல்ல தலைவரை முறையாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை விட்டு விட்டார்கள். ஒரு பிரச்சாரப் படமாக இது பயன்படலாம். ஆனால், சாதாரணத் தமிழ்ச் சிறுவன் மனதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. Life history படம் எடுப்பதில் நம்ம ஆட்கள் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.

சென்னை 600028 – இன்னொரு ஊதிப் பெரிசாக்கப்பட்ட படம். கதைக்களம், பாத்திரப் படைப்புகள் புதிது தான். ஆனால், தேவையில்லாத பாடல்கள், bore அடிக்கும் கிரிக்கெட் காட்சிகள் தவிர்த்து 50% படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். லகான் படத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக புத்திசாலித்தனமாக மாற்றி இருந்தார் இயக்குனர். அதில் பந்துக்குப் பந்து, வீரருக்கு வீரர் strategy, style மாறி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் காட்சிகள் ஏனோ விளம்பர இடைவேளை முன்னோட்டம் போல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பின்னணி இசை அதை விட கொடுமை. படத்தில் ரசித்த இரண்டே காட்சிகள் – சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது. இந்த Radio Mrichy சிவாவின் குறும்புக் குரலுக்கு நான் மிகப் பெரிய விசிறிங்கிறது துணைத் தகவல் 🙂

ஒக்கடு (கில்லி) – லைடன் மகேஷ்பாபு ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் யாம் அவரது பழைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். என்ன இருந்தாலும் தமிழனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒக்கடுவை விட பல மடங்கு நகாசு வேலைகளோடு, முக்கியமாக வீட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளை, கில்லியை அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச மாற்றங்களோடு ஈயடிச்சான் copy படங்கள் எடுப்பது எப்படி என்று அறிய இயக்குனர் ராஜா & co, சென்னைக் கிளையை அணுகவும். நுவ்வொஸ்தானந்தே நேனொத்தந்தா (இது தாங்க தெலுங்குப் படப் பெயர்!!!) -ன் தமிழ்ப்பதிப்பான Something Somethingல் கோழி, வாத்து பறப்பது கூட Frame பிசகாமல் copy அடிக்கப்படிருந்தது பார்த்துப் புல்லரித்துப் போனேன் 😉

உன்னாலே உன்னாலே – நல்லா இருக்கு. பின்பகுதி படத்தை 2,3 தடவை கூட தாராளமா பார்க்கலாம். கவர்ச்சி, ஆபாசம், சண்டை, மட்டமான நகைச்சுவை இல்லாமல யதார்த்தமாக ஒரு இளமை துள்ளும் படம். இதப் போய் ஏன் நல்லா இல்லை, கதை இல்லைன்னு நிறைய பேரு திட்டி விமர்சனம் எழுதுறாங்கன்னு புரில! 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு ! படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது? கொஞ்சம் இந்த மாதிரி சந்தோஷமாவும் இன்னும் நிறைய பேர் படம் எடுத்தா நல்லது.

Hotel Rwanda – ஈரக் குலையை நடுங்க வைக்கும் மனிதம் ததும்பும் உண்மைக் கதை படம்! எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க ! இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது! இத எல்லாம் நம்ம வரலாற்றுப் பாடப் புத்தகங்கள்ல சேர்க்க மாட்டாங்களா?

Superman Returns – ஒன்னு புரிஞ்சு போச்சு. சிகப்பு, நீலக் கலர்ல பனியன், ஜட்டி design செஞ்சுட்டா நாமளும் Spiderman, Superman படங்களை எடுத்திடலாம். ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு பாகம் எடுக்கலாம். கூடவே, ரஜினி பட heroism, பழைய முரளி பட காதல் sentiment எல்லாம் கலந்துக்கணும்.

Happy Feet – ஒரு முறை பார்க்கலாம். என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது ! இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா? விட்டா நல்லது தான்.

Lost in Translation – Mr. and Mrs. Iyer மாதிரி திருமணமான இருவருக்கு இடையில் மலரும் மெல்லிய அன்பு குறித்த கதை. நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம்.

Motorcycle Diaries – சே குவேரா அவருடைய நண்பருடன் செய்த Motorcycle பயணம் குறித்த diaryய அடிப்படையா வைச்சு எடுக்கப் பட்ட படம். ஒரு புரட்சியாளனின் கதையைப் பார்க்கிறோம் என்ற பிரமிப்பு அகலாமல் பார்க்கலாம். பிரச்சாரம் இல்லாத இயல்பான படப்பிடிப்பு. முழு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடைக்காமல் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை மட்டும் படம்பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.

Salam Namaste – முன் பாதி இரண்டு முறை பார்க்கலாம். சாயஃப் அலி, ப்ரீத்தி பிடிச்சவங்களுக்கு இந்தப் படம் நல்லாவே பிடிக்கும். இதில வர்ற இந்தியக் comedian கலக்கல்.

மொழி – அருமையான படம்!

பருத்தி வீரன் – பலரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் தோணலை. மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. இந்தப் படத்துல பாட்டு எனக்கு என்னவோ எனக்கு ஒட்டவே இல்லை. இரண்டு நீளமான பல பகுதி flash back bore. செம சாதாரணமான கதை. கதையின் முடிவுக் காட்சி கோரம் தேவையில்லாதது. மண்டை வலி தான் மிச்சம். கதைல வர்ற சோகத்தால நாயகன், நாயகி மேல எந்த விதமான பரிதாபமும் வரல. இந்தப் படத்த இரண்டு வருசம் எடுக்க என்ன இருக்குன்னு தோணல. Not recommended for viewing

போக்கிரி (தமிழ்) – விஜய், அசின், வடிவேலுக்காக ஒரு முறை பார்க்கலாம். தெலுங்குப் படத்த remake பண்ணாலும் இப்படியா ஈயடிச்சான் copy அடிக்கிறது? இதே படத்துல மகேஷ் பாபு நடிச்சிருந்தா நல்லா இருக்கும். original படம் அளவுக்கு அதே வன்முறை. ஆனா, கூடுதல் கண்ணியமா எடுத்திருக்காங்க. வடிவேலு comedy நல்லா இருக்கு.

தாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகி tv serial நடிக்கத் தான் தகுதின்னு தோணுது.

குரு (தமிழ்)சுத்த waste படம். aishwarya rai இனிமேலும் நாயகியா நடிக்கிறத நிறுத்திக்கணும். மணிரத்னம் தன் பழைய படத்தில இருந்தே காட்சிகளை remix பண்றத நிறுத்தணும்..

PhD, University Research Student Life abroad Vs India, Admission, Funding

நண்பர் ஒருவர் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து மடலில் கேட்டிருந்தார். அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கீழே:

நண்பர்: எனக்கு ஒரு தகவல் வேணும்.. நீங்க ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீங்க இல்லையா, இதுக்கான செலவெல்லாம் எப்படி? – எல்லாமே உங்க கைக்காசா? இல்லை அரசாங்க / பல்கலைக்கழக உதவி ஏதாச்சும் இருக்கா? அப்படி அரசாங்க உதவி உண்டுன்னா, உங்க படிப்புக்கு மட்டுமே இருக்குமா? அல்லது மற்ற செலவுகளுக்கும் தருவாங்களா? அமெரிக்கா மாதிரி research assistant/ teaching assistant kind of வேலையும் செய்றீங்களா?

நான்: In Netherlands doing PhD is considered as job and they pay me for doing it and I am considered an employee of Leiden university and I get all employee benefits like bonus, holiday, sick leave, insurance etc., I don’t teach in the University or do part time work outside, though some other friends of mine do take practical classes few weeks a year and they don’t get paid for it separately. The monthly salary is all inclusive and i can manage my living expenses, go for trips and save something and send home some money too 🙂 there is no college or PhD fee. Full free.

My project is funded an association of companies which sponsor research. some PhD students get funding from government or university. depends on the university, project, boss..some who are not able to find sponsor for project just join the PhD and manage by doing part time work initially..and later the boss tries to give them some teaching assistantship and help him..or you can also write project proposals to funding agencies and try to get funding yourself..it works like that in Germany..mostly who come for PhD don come with their own money..its very expensive and also by the time you do PhD you are in the age to earn and help family..so no one comes without a solid funding..

My PhD time is for 4 years ..

நண்பர்: Is this the same for Research studies all over the world? Like say, India, Australia, etc?

நான்: it depends from country to country. In India university funding is almost zero except for premier institutes like IISc, IITs. If you have a very big sponsor company for your research project and if your boss is good then u might get 10,000-15, 000 Maximum depending on your project. I know many who do PhD in India with zero funding and own money or very minimal funding like 3,000-5,000 given by boss through research and teaching assistantship..indeed life will be pathetic 🙁 The next and common type of funding is by CSIR (Council of scientific and industrial research) or through department of science and technology of India..every year they conduct competitive exams to award research fellowship..If you clear that exam, then u can join research institute of your interest and Govt of India will pay you 10, 000-15,000 depending on your year of research..This is highly competitive as every year thousands take this test and only hundreds clear it. 4 years before this amount was a paltry 5,000 something and that’s one of the reasons why best minds in India don’t have research as first option..either they go to industry or if they are really passionate in science they leave abroad to do studies in good institutes with a chance of funding they deserve..those who are passionate on science and yet who can’t or don’t want to leave India for personal or ideological reasons continue to work in Indian institutes..Can’t go category include personal reasons like not having money to apply to foreign colleges, write / clear GRE, TOEFL etc, having to take care of family etc., Ideological reason mainly is patriotic. I myself spent almost a two lakhs, ma (by borrowing from friends) in writing GRE, TOEFL, applying for numerous colleges in US and Singapore, making travel arrangements.Those who can’t afford so much will have to decide otherwise.

In US, UK you can directly apply for PhD after B.Tech (u need to write TOEFL, GRE). Europe , Singapore, Australia would require a master before PhD..countries like Germany, Singapore even accept GATE instead of GRE. But clearing GRE is easier than clearing GATE (I failed both in GATE and CSIR entrance 🙂 Getting admission in Indian institutes like IISc are much tougher compared to abroad universities). US PhD is 5 years and the first years will automatically be considered Masters. If you clear masters then u proceed to PhD. You can also opt to leave just with masters. Getting admission even in renowned foreign universities is very easy provided u can self-sponsor..But they are very expensive..two years of master study would consume can even consume around 20 lakhs for living, school fee etc, Students with good financial background self-sponsor their fees and try to meet the ends by working part time..in most of the foreign countries you can manage your expenses with part time work..

One main reason why students opt to do research outside is the freedom your abroad bosses give (Many (Not all) Indian bosses suck – they treat you like maid servant, have lot of ego, push their ideas on you, sadistic, sarcastic, psychos, lazy, outdated, lot of institute politics – they do everything except research, some even ask the female students to sleep with them), global exposure (one can attend lot of conferences) and experience in research which is very important for a scientist, the chance to earn well, go around and enjoy, and your project will never stop for lack of funding..in India project funding is really stingy..India should spend at least 100 times more for research if we want to achieve anything..and 1000 times more for primary education 🙁

Joining European institutes may be the least costliest and straight way. If you could impress the professor with your previous works and a project proposal and if he is willing to take you, then everything is done. No competitive exams and applications and the process is quick. For other countries one may have to wait at least 6 months to 1 year before joining PhD as the admission process is cumbersome. If you want to get admission abroad, your work experience with a renowned professor in India helps. For this students, our classmates in B.Tech do almost a year of project work under them in various institutes in India. Recommendation letters from them really help a lot in getting admission. Also, if you do Masters outside India that drastically increases your scope for PhD admission and funding. Once you come out of India, its lot more easier to get admitted for higher studies, switch institutes than to try from India. many abroad institutes are not so confident or understanding about the Indian degree, education system except for the one from popular brands like IITs, IIsc. If you are already working well in an institute abroad getting admit for your girl friend or spouse in the same institute may be a lot more easier .

நண்பர்: I have heard that in US, you need to take up some job for supporting yourself.. even if project gets sponsored.. – ofcourse not sure 🙂

நான்: No need. The sponsorship is quite good and you don’t have to pay a single paise of fee for your PhD studies. Many of my friends, classmates who do PhD in US have complete fee waiver and get approximately 20, 000 USD per year as stipend which is quite a lot for a student to live happily.The stipend in Europe can range from 1000-1700 Euro per month depending on one’s year of study and you could very well save half that amount.

நண்பர்: And what about ragging and that sort of issues in these research studies?

நான்: Ragging-a? Hello, it is only in the first year of B.Tech and may be only in India only. They really treat the Masters and PhD students like gentlemen / Scientists. நமக்கு இவ்வளவு மரியாதையானு நாம தான் நெளிய வேண்டி இருக்கும் 🙂 If you had asked about racism it would have been a good question 🙂 in Netherlands, there is no visible racism and its really a friendly country. In most of the countries it may be hidden, subconscious and mostly severe against the blacks. When Europeans speak in local language during project, lunch, social meetings one might feel left out and you are bound to learn the local language sooner or later. PhD students are not seen as competitors while they are studying. But after study, the companies might want to employ the local person for logical or legal reasons. In Europe, they give first preference to locals, then to EU country citizens and then to outsiders. This is mandatory by law. Once you get a job and go up in the ladder you might see more effects of racism / preference for local in higher posts. You might be needed to be of exceptional merit for your nationality to override such biased situations.

in tamil alsoவா?

தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள்.

பிரசாத் என்று ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். பேசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால், “பிரசாத், what is that in telugu, what is this in telugu” என்று அவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கம். 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு வழியத்தில் தான் படித்து இருக்கிறார். ஆனாலும், பல சமயங்களில் திணறுவார். அவர் ரொம்ப யோசித்தால் அதற்கான தமிழ் சொல்லுடன் +உ சேர்த்து சொல்வோம். இல்லை, புலம், பணி போன்ற தமிழ் சொற்களையே சொன்னால், முகம் மலர “in tamil also same word-ஆ” என்பார். “in tamil also இல்ல பிரசாத்..telugu also” என்று திருத்துவோம் 🙂 தமிழ் சொல் ஒத்து வராத வேளையில் அதற்கான வட மொழிச் சொல் சொன்னால் பொருந்தி வரும். அதுவும் இல்லாவிட்டால், ஆங்கிலத்தில் சொன்னால், “yes in telugu also we say like that only. we don have separate telugu word” என்பார். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகியவற்றை நீக்கினால் தெலுங்கில் என்ன மிஞ்சும் என்றே தெரியவில்லை ! ஆனால், இதில் என்ன வசதி என்றால் நம்மைப் போன்ற அண்டை மொழிக் காரர்கள் அவர்கள் படங்கள், பாடல்கள், உரையாடல்களைக் கேட்கையில் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளை, தமிழிலும் ஆங்கிலம், வட மொழி என்று வகை தொகை இல்லாமல் கலந்து கொண்டே போனால் எங்கு போய் நிற்போம் என்பதற்கு கண் முன் சாட்சியாக எச்சரிக்கை மணியடிப்பதாகவும் இருக்கிறது.

எவ்வளவு தான் எடுத்துக்காட்டுகள் தந்தாலும், தெலுங்கு தமிழில் இருந்தும் தோன்றி இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார். வடமொழியில் இருந்து தான் தெலுங்கு தோன்றியது என்று சொல்வதில் என்ன புளங்காகிதம் என்று புரியவில்லை. அவர்கள் பள்ளிக்கூடங்களில் சமசுகிருதப் பாடம், கவிதைகள் படித்தாலும் அதைத் தெலுங்கு எழுத்துகளில் எழுதித் தான் படித்ததாகச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் பயன்படாத சில தெலுங்கு எழுத்துக்களை அரசு நீக்கி விட்டதாகவும் சொன்னபோது ஆடிப்போனோம் ! தெலுங்கு மாதப் பெயர்களை அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. கேட்டால், பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு சொல்லித் தரவில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். மாதப் பெயர்களைக் கூடச் சொல்லித் தராமல் எப்படி ஒரு பாடத்திட்டம் இருக்கும்? இப்படி மொழி குறித்த அவர்கள் அணுகுமுறை, பார்வையில் பல ஆச்சரியங்கள் எங்களுக்கு. இன்னும் பலரிடம் பழகிப் பார்த்து இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகள் குறித்த ஆர்வத்துக்கு இன்னொரு காரணம் – தமிழில் காணாமல் போன பல பழஞ்சொற்கள் எப்படி அங்கு இன்னும் புழக்கத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் சுவாரசியம். முதலில் தெலுங்குச் சொல் என்று நினைத்துக் கொண்டிருந்த சில சொற்கள் அவ்வப்போது திருக்குறள் போன்ற இலக்கியங்களில் தலை காட்டும் போது வரும் மகிழ்ச்சியே தனி. புதிதாக ஏதோ புதையலைக் கண்டெடுத்த மாதிரி ! நேற்று இப்படி ஒரு சொல்லைக் கண்டெடுத்தேன். தெலுங்குல “நச்ச லேதா” அப்படின்னா “விருப்பமில்லையா”ன்னு பொருள். இதே பொருள்ல ஒரு திருக்குறளல் நச்ச என்ற சொல் வருகிறது !!

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
Kural 1008

Prose
When he whom no man loves exults in great prosperity,
‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.

Translation
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

ஆக, பிரசாத்தை ஓட்ட இன்னொரு tamil also word கிடைத்தது 🙂 நல்லா, நச்சுன்னு ஒரு சொல் தான், இல்ல 🙂

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நெதர்லாந்தில், இந்தியா குறித்து:

1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?

பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!

2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?

நான் சொல்றது – நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம காதல் திருமணம் கைகூடுறது ஒரு கொடுப்பினை தான் !

3. இந்தியால பல மொழி இருக்கே? எப்படி தொடர்பு கொள்றீங்க? அது என்ன ஒரு நாட்டுல இருந்து வந்துட்டு ஒருவருக்கு
ஒருவர் ஆங்கிலத்துல பேசிக்கிறீங்க?

4. இந்தியாவுல ஏன் பணக்காரன் – ஏழைக்கு இடையில் இவ்வளவு பெரிய பிரிவு இருக்கு?

5. இந்தியாவுல பாம்பு இருக்கா? வேற என்ன எல்லாம் விலங்கு இருக்கு? ஏன் மாட்டுக் கறி சாப்பிட மாட்டீங்க? எந்தெந்த சாமிக்கு என்னென்ன வாகனம்?

6. இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிட மாட்டேங்குது?

7. கிரிக்கெட்னா என்ன? அத எப்படி விளையாடுறது? இந்தியால ஏன் கால்பந்து பிரபலமாகலை?

கிரிக்கெட்னா குதிரை மேல ஏறி ஆடுற ஆட்டமான்னு ஜெர்மனில ஒருத்தன் கேட்டான்..அடப்பாவிகளா!

8. இப்ப இருக்க காந்தி எல்லாம் மகாத்மா காந்தியின் உறவுகள் தான?

9. எப்படி இந்து மதத்தில் இவ்வளவு கடவுள்கள்? உனக்கு யாரைப் பிடிக்கும்? ஏன் பிடிக்கும்? ஒரு கடவுகளுக்கு இன்னொருவர் என்ன உறவு?

அலுவலகத்தில்:

வார இறுதி எப்படி போச்சு? விடுமுறைக்குப் போறியா? அம்மா அப்பாவை எப்ப இங்க அழைச்சிட்டு வர்ற? weather மோசமா / நல்லா இருக்கு இல்ல?

Project meetingல்:

So how about the results?

#$%&* 🙁

தமிழர் அல்லாத இந்தியர்கள்:

ஏன் இந்தி கத்துக்க மாட்டீங்கிறீங்க? ஏன் இந்தி மேல வெறுப்பு? சமசுகிருதத்துல இருந்து தான தமிழ் வந்துச்சு? தமிழ் எவ்வளவு பழமையானது? தமிழ் எப்படி செம்மொழியாகும்? ஏன் உங்க மொழித் தூய்மையை வலியுறுத்துறீங்க? இந்தி படிச்சா நாட்டு ஒற்றுமை கூடும்ல?

உண்மையிலயே அறியாமையால கேட்டா விளக்கம் சொல்வேன். விதண்டாவாதத்ததுக்குக் கேட்டால், “போடா, புண்ணாக்கு”-னுட்டுப் போய்டுவேன். தமிழ், மொழி தொடர்பில நான் கொஞ்சம் sensitive தான். தெலுங்கு, கன்னடக் காரர்களுக்கு அவர்கள் மொழி தமிழில் இருந்து வந்தது என்று சொல்லிக் கொள்வது ஏதோ அவர்கள் உடம்பில் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கும் போல. சமசுகிருதத்தில் இருந்து அவர்கள் மொழி வந்தது என்று சொல்லும் போது அவர்கள் முகத்தில் ஒரு 100 watts ஒளி பார்க்கலாம். தனித்தமிழ் இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியே தமிழின் நிலை இந்த அளவில் இருக்கிறது. பிற மாநிலத்தவர் போக்கைப் பார்த்தால், இன்னும் 50 ஆண்டுகளில் அவர்கள் மொழிகளின் நிலை பின்வருமாறு இருக்கலாம் – மெத்தப்படித்தவர்கள், ஆங்கில எழுத்துக்களில் தெலுங்குச் சொற்களை எழுதிக் கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள், ஆங்கிலச் சொற்களைத் தெலுங்கில் எழுதி அதை தெலுங்காக்கி விட்டிருப்பார்கள். தமிழின் வளர்ச்சியை எந்த அளவு வலியுறுத்துகிறேனோ அதே அளவு வங்காள, தெலுங்கு நண்பர்களிடம் அவர்களின் மொழியின் இருப்பு, வளர்ச்சி, தொடர்ச்சி குறித்து வலியுறுத்தினால் வரும் பதில் – “Why unnecessarily think about all this..see the world is changing and we better learn english..these things all need to be done by government..blah blah blah” மொழி மீதான அறிவு, பற்று, காதல், உணர்வு, பிணைப்பு நம்மவர்களுக்கு ரொம்பவே கூட என்று தான் தோன்றுகிறது.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகையில் கேட்கப்படுவது:

அபத்தா, அமத்தா, அத்தை, சித்திகள்:

உங்க நாடு எவ்வளவு தொலைவில இருக்கு? எவ்வளவு நேரம் பயண நேரம்? உங்க நாட்டுல சாப்பாடு, குளிர் எப்படி? அங்க மாட்டுக் கறி, பன்னிக்கறி திம்பீங்களா? நீயா தான் சமைக்கணுமா? என்ன சமைப்ப? நம்ம ஊர் சாப்பாடு கிடைக்குமா? என்ன விலை? கோயில் இருக்கா? அதில என்ன சாமி இருக்கு? அது எவ்வளவு தொலைவு? எப்பெப்ப கோயிலுக்கு போவ? தண்ணி கிண்ணி அடிச்சுப் பழகிட்டியா? phone பேசுறதுக்கு ரொம்ப செலவு வராதா? நம்ம ஊர் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா? போய் பத்து மாசத்துல வந்துட்ட? அங்கனயே இருந்தா காசு மிச்சப்படுத்தலாம்ல?

மாமாக்கள்:

என்ன மாப்ளே படிச்சுக்கிட்டே போறீங்க? எப்ப சம்பாதிக்கிறது, கல்யாணம் கட்டுறது? நம்ம புள்ளைகளை எல்லாம் கட்டுவீங்களா? உங்களுக்குப் படிச்ச புள்ளை தானே ஒத்து வரும்?

டீக்கடை பெரிய மனுசர்கள்:

அங்க வேலை எப்படி தம்பி? எவ்வளவு நேரம் வேலை? எவ்வளவு சம்பளம்? மிச்சப்படுத்தலாமா? நம்ம வீட்டுத் தம்பி Polytechnique படிச்சிருக்கான்? அங்க வேலை கிடைக்குமா? Agent மூலமா போனீங்களா? Ticket செலவு எவ்வளவு? அதுவும் உங்க companyல கொடுப்பாங்களா? நெதர்லாந்து எங்க இருக்கு?

நண்பர்கள்:

மச்சான், CD- கீடி, P*** magazines, சரக்கு வாங்கி வந்திருக்கலாம்ல? அங்க figureங்க எல்லாம் எப்படி? என்னென்ன ஊர் பார்த்த? இன்னும் virgin-னு சொல்லாத? தண்ணி அடிக்காம, சிகரெட் புடிக்காம, ****** பண்ணாம நீ எல்லாம் ஏன்டா europeல இருக்க? பல் இல்லாதவனுக்குத் தாண்டா பக்கோடா கிடைக்குது? அடுத்து என்ன பண்ற மச்சி? பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சுல்ல?

அம்மா, அப்பா, அக்கா, தங்கை:

இன்னும் கொஞ்சம் நாள் இருக்க மாதிரி வந்திருக்கலாம்ல? வந்த உடன போற? எப்ப திரும்ப வர்ற? வந்தா வீட்ல இருக்காம ஏன் friends friendsனு நாய் மாதிரி சுத்திக்கிட்டுத் திரியுற? சாப்பிட என்ன செஞ்சு தரட்டும்? இங்க இருந்து என்ன வாங்கிட்டுப் போகணும்? காசு இல்லைன்னு சொல்லிட்டு அங்க இருந்து ஏன் இவ்வளவையும் வாங்கிட்டு வர்ற?

காணாமல் போன நண்பர்கள் orkutல் கண்டுபிடித்தால்:

How’s life machaan? what’s up da? no scraps? what’s ur research about da? where r u da now?

நெதர்லாந்தில் இருந்து வீட்டுக்கு phone பேசும்போது:

சாப்டியா? என்ன சாப்ட? நல்லா இருக்கியா? உடம்பு நல்லா இருக்கா? அடுத்து எப்ப ஊருக்கு வர்ற? என்னாச்சும் வாங்கி அனுப்பவா? அங்க என்ன மணி இப்ப? படிப்பு எப்படி போகுது? வெயில் அடிக்குதா, குளிரா? மழை பெய்யுதா? அந்த DVD வாங்கி அனுப்புறியா? எனக்கு என்ன வாங்கிக் கொடுத்து விடுற? என்ன படம் பார்த்த? செலவுக்கு காசு இருக்கா?

இணையத்தில்:

விக்கிபீடியாவை எப்படி நம்புவது? விக்கிபீடியாவுக்கு எப்படி, ஏன் பங்களிக்க வேண்டும்? உங்கள் வலைப்பதிவை ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை?

நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள்:

வீட்டுக்குப் பேசும் போது:

அக்கா பேசிச்சா? harish எப்படி இருக்கான்? உடம்பு நல்லா இருக்கா, அம்மா? அப்பா எங்க? பணம் கிடைச்சுச்சா? மழை பேஞ்சுச்சா? வயல்ல என்ன போட்டிருக்கு? மாடு கன்னுக்குட்டி போட்டிருச்சா? எங்க போனீங்க? வீட்டுக்கு யார் வந்தாங்க ? என்ன சாப்பாடு?

எனக்குள் நான்:

அன்புன்னா என்ன? நட்புன்னா என்ன? கற்புன்னா என்ன? உண்மைன்னா என்ன? காதல்னா என்ன? What’s the purpose of living? Is this all worth it?

விடையே இல்லாத கேள்விகள்:

ஏன் இப்படி பண்ண? நான் என்ன தப்பு பண்ணேன்? சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல?