மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்.

இந்தப் படம் மொத்த கருவுறுதல் விகிதத்தைக் காட்டுகிறது.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த கருவுறுதல் விகிதம்.
இந்த விகிதம் 2.1 என்று இருந்தால் அந்தச் சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும். 2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறையத் தொடங்கும்.
இப்பொழுது நமது படத்திற்கு வருவோம்.
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசின் அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பார்க்கலாமா?
இந்த கோப்பின் 124ஆம் பக்கத்தை பாருங்கள்.
அதில் நான்கு செங்குத்து வரிசைகள் உள்ளன.
- வரிசை எண்
- மாநிலம்
- தற்சமயம் இருக்கும் மொத்த கருவுறுதல் விகிதம்
- இலக்கு
உங்களுக்குப் புரிவதற்காக நான் அதில் கூடுதலாக “இலக்கின் விளைவு” என்று ஒரு வரிசை சேர்த்துள்ளேன்
|
Total Fertility Rate—India and Major States
|
|
|
|
|
|
|
|
|
|
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை
|
அதாவது, சில மாநிலங்களில் மக்கள் தொகையைக் கூட்ட திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்.
அதாவது இந்திய ஒன்றிய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
இந்தியாவின் மக்கள் தொகை அப்படியே இருக்க வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை கூட வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும்
அப்படித்தானே !! இது நல்ல திட்டம் தானே !!! இதில் ஏதாவது ஐயம் உள்ளதா 🙂
இனி
எந்த மாநிலங்களின் மக்கள் தொகை கூடுகிறது என்றும் எந்த மாநிலங்களின் மக்கள் தொகை குறைகிறது என்றும் பார்க்கலாமா?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்
|
|
|
|
|
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை
|
இந்திய ஒன்றிய அரசு போடும் ஒரு திட்டத்துக்கு ஏன் இப்படி இந்தி எதிர் பிற மொழிகள், வடக்கு எதிர் தெற்கு, ஆரியம் எதிர் திராவிடம் என்றெல்லாம் உள்நோக்கம் கற்பித்து இதனை ஒரு சதித்திட்டம் போல் பார்க்கிறீர்கள் என்கிறீர்களா?
இதே இந்தியாவின் மக்கள் தொகை நிலையாக இருக்க,
* இந்துக்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சமயத்தவர் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* உயர் சாதியினர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சாதியினர் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* பணக்காரர்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் ஏழைகள் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* வட தமிழக மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தென் தமிழக மக்கள் தொகை குறைய வேண்டும்.
என்று திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?
இதே போல் இலங்கையின் மக்கள் தொகை நிலையாக இருக்க,
* சிங்களவர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தமிழர் மக்கள் தொகை குறைய வேண்டும்
என திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?
இலங்கையில் இரு இனங்கள் என்பதால் உறுத்துகிறது. இந்தியாவில் பல இனங்கள் என்பதால் நமக்கு உறைக்கவில்லை !
சரி, அப்படியே சில இனங்களின் மக்கள் தொகை மட்டும் குறைந்தால் என்ன இழப்பு என்கிறீர்களா?
* மக்கள் தொகை குறுக்கம் ஒரு வளர்ந்த நாட்டுச் சிக்கல். இச்சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகள் தத்தம் நாடுகளில் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சலுகைகள் தருகின்றன. ஆனால், தமிழர் மக்கள் தொகை குறைவதால், அதனைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக மாநில அரசுக்கு உரிமை உண்டா?
* வருங்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு இனங்களின்
அரசியல் உரிமைகள் மாற்றி அமைக்கப்படாது என்பதற்கு உறுதி உண்டா? மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையும் மாற்றப்படும் என்பதை அறிவீர்களா?
தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்தே தமிழக நலன்கள் சார்ந்த ஆற்று நீர் பகிர்வு, மீனவர் நலம், ஈழத்தமிழர் நலம் தொடர்பான சிக்கல்களில் ஒன்றும் சாதிக்க இயலவில்லை. ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தாலும், நம்முடைய பங்கேற்பு இல்லாமலேயே நடுவண் அரசு அமைக்க முடியும் என்பதை 2014 தேர்தல் சுட்டுகிறது. இந்நிலையில், நமக்கான மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தாலோ இந்தி பேசும் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தாலோ என்ன மாதிரியான விளைவுகள் வரும்?
* தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைவாலும் நல்ல அரசாட்சியாலும் கிடைக்கக்கூடிய பயன்கள், இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு குடியேறுபவர்களால் நீர்த்துப் போகும்.
* இந்தியாவின் மக்கள் தொகையைச் சம நிலையில் வைக்க, தேவையே இல்லாமல் தமிழகத்தின் மக்கள் தொகை மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளைய சமூகத்தில் முதியோர் விகதம் கூடுதல், தனித்து விடப்பட்ட பெற்றோருக்கான சமூக பாதுகாப்பு, ஆண் – பெண் விகிதம், நகரமயமாக்கத்தின் விளைவுகள், உழைக்கும் இளைஞர்கள் குறைவு என்று எழும் பல்வேறு பிரச்சினைகளையும் தமிழக அரசு தான் எதிர்கொள்ள வேண்டும். இது தேவையில்லாத தலைவலி (சப்பானின் கதை).
* தமிழ்நாட்டில் பிற மொழியினர் மக்கள் தொகை கூட கூட, தமிழர் நிலம் தமிழர் கையை விட்டுப் போகும். நிலம் போனால் மொழி, பண்பாடு, தன்னாட்சி என்று வரிசையாக கை விட்டுப் போகும். நாமெல்லாரும் இந்தியர்கள் தாமே என்றால், இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் விளைவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். சம்மு காசுமீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்ற சட்டம் ஏன் என்று எண்ணிப் பாருங்கள். அரபியர்களின் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்கித் தான் இசுரேல் என்ற நாடு பிறந்ததை அறிந்து கொள்ளுங்கள்.
* ஏற்கனவே 26% மட்டுமே உள்ள இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைத் திரித்து 45% என்று கூட்டிக் காட்டுகிறார்கள். இந்தப் பிழையான மக்கள் தொகை கொள்கை வரும் ஆண்டுகளில் இன்னும் அந்த எண்ணிக்கையைக் கூட்டி பல நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு உதவும்.
இந்திய ஒன்றிய அரசின் திட்டப்படி, இந்தி பேசும் மக்களின் தொகை கூடிக் கொண்டே போகும். மற்ற மொழிகளைப் பேசும் இனங்களின் தொகை குறைந்து கொண்டே போகும்.
இது குடும்பக் கட்டுப்பாடா?
இல்லை, இனக்கட்டுப்பாடா?
தொடர்புடைய கட்டுரை: The Impending South Indian Population Implosion