உளவியல் மருத்துவ பயங்கரவாதம்

டெங்குக்கும் ஏமாற்று மருத்துவக் கும்பலுக்கு என்ன தொடர்பு? ஏன் இவர்களைப் போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்?

…போன நூற்றாண்டில் நம் மக்கள் மருத்துவர்கள் இல்லாமல் செத்தார்கள். இந்த நூற்றாண்டில் நவீன மருத்துவம் இருந்தாலும், அதனை நம்பாதே, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, எல்லா நோய்க்கும் செடியில் மருந்து இருக்கிறது என்று மூளைச்சலவை செய்யும் இந்த மோசடி ஏமாற்று மருத்துவக் கும்பலால் சாகிறார்கள்.

ஒரு தீவிரவாதி குண்டு வைத்தால் 100 பேர் தான் சாவார்கள்.

ஒரு ஊர் குளத்தில் விசம் கலந்தால் 1000 பேர் தான் சாவார்கள்.

ஆனால், இந்த ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பலோ தடுப்பூசி போடாதே என்கிறது. காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்குப் போகாதே என்கிறது. தானே எல்லாம் சரியாகும் வீட்டில் பிரசவம் பார் என்கிறது. கொசு வளர்த்தால் பூ பூத்து காய் காய்க்கும் என்கிறது.

இது கோடிக்கணக்கான மக்களைத் தலைமுறை கடந்தும் கொல்லும் பயங்கரவாதம். உளவியல் மருத்துவ பயங்கரவாதம்.

இந்தக் கும்பல், இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அனைவரையும் ஒரு தீவிரவாதிக்கு என்ன மரியாதை தருவோமோ அதே மரியாதை தான் தர வேண்டும். அடி அடி அடி. சாவடி.

காண்க – முகநூல் உரையாடல்