தமிழ் இன்று

இற்றை:

முதலில் விலையில்லாமல் வெளியிடப்பட்ட தமிழ் இன்று மின்னூல் 1000 தரவிறக்கங்கள் கண்டதை அடுத்து, இன்னும் 15 கட்டுரைகளைச் சேர்த்து புதிய மேம்படுத்திய மின்னூல் ஒன்றை விற்பனைக்கு விட்டுள்ளேன். தமிழ் நூல்களை மின்வடிவாக்கும் முயற்சியின் முதற்படி இந்நூல் வெளியீடு. உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். நன்றி.

பார்க்க: noolini.com

***

இந்த வலைப்பதிவில் உள்ள சில கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் இன்று என்ற பெயரில் என் முதல் மின்னூலை வெளியிட்டுள்ளேன்.

பொன்னியின் செல்வனையே கைப்பேசியில் படித்து முடித்தவர்களைத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்குச் சம கால தமிழ் மின்னூல்கள் வாசிக்கக் கிடைப்பதில்லை. இந்தப் பின்னணியில், கையடக்கக் கருவிகளில் தமிழ் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டற்ற நூல்களை உருவாக்க வேண்டும் என்ற நண்பர் சீனிவாசனின் Free Tamil Ebooks திட்டம் மிகவும் பிடித்திருந்தது. எனது வலைப்பதிவு இடுகைகளை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தாலும், இத்திட்டமே அதற்கான தூண்டுகோல். எனது கட்டுரைகளை மின்னூல் வடிவில் இட்டுப் பார்த்த போது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதே போல் இன்னும் பலரும் தங்கள் நூல்களை கட்டற்ற உரிமத்திலும் மின்னூல் வடிவத்திலும் தர முன்வருவது பெரும் புரட்சியாக இருக்ககும்.

நூலைப் பதிவிறக்க இங்கு செல்லுங்கள். பதிவிறக்கும் முன் நோட்டமிட, இங்கு செல்லுங்கள்.

பார்க்க: தமிழ் மின்னூல்களைப் படிப்பதற்கான வழிகாட்டி

நன்றி

* மின்னூல் உருவாக்கத்துக்கு Pressbooks.com உதவும் என்ற குறிப்பினைத் தந்துதவிய நண்பர் K. S. Nagarajanக்கு நன்றி.

* Free Tamil Ebooks என்ற திட்டத்தை முன்னெடுக்கும் சீனிவாசனுக்கு நன்றி. மின்னூல் உருவாக்கம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப ஐயங்களைத் தீர்த்து வைத்ததுடன், குறிப்பிட்ட தளத்தையும் நூலையும் சோதித்துப் பார்த்து வெளியிடுவதற்கும் முழு உதவி நல்கினார்.

மொழி வல்லாண்மை குறித்த பகிர் நூலகம்

மொழி வல்லாண்மை குறித்த சில முக்கியமான நூல்களைத் தமிழர்கள் ஒரு சில நூறு பேராவது படித்துத் தெளிவது அவசியம் என்னும் நோக்கில், தமிழார்வலர் ஒருவர் பின்வரும் நூல்களைக் கொடையளித்துள்ளார். ஒவ்வொருவரும் நூல்களைப் படித்து முடித்து திருப்பித் தந்தால், தொடர்ந்து பலர் படித்துப் பயன் பெறுவார்கள்.

நூல்கள் விவரம்:

* கோவையில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள்.

* பெங்களூரில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள balasundar at gmail dot com க்கு எழுதுங்கள்.

திரை கடலோடியும் துயரம் தேடு

திரு எழுதிய திரை கடலோடியும் துயரம் தேடு படித்தேன்.திரை கடலோடியும் துயரம் தேடு “இங்க வேலையே இல்லையா என்ன, எதுக்கு வெளிநாட்டுக்குப் போறாங்க?”, “அவங்களா விரும்பித் தானே போனாங்க.. அப்புறம் போயிட்டு சிரமமா இருக்குன்னா அதுக்கு என்ன பண்ணுறது?” என்று கேட்கும் பொது மக்களும் “இப்படி தெரியாம வந்து மாட்டிக்கிட்டனே, இதில இருந்து எப்படி மீளுறது?” என்று மயங்கும் தொழிலாளர்களும் “அவுகளுக்கு என்ன, வெளிநாட்டு மவுசுல இருக்காங்க” என்று புகையும் சுற்றத்தாரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். நிறைகள்: * திரு, பன்னாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நேரடியாக களப்பணியாற்றிய அனுபவம் உடையவர். தொழிலாளர்கள் பற்றிய ஆர்வம், அக்கறை, அனுபவத்தால் எழுதப்பட்ட இந்நூல் மிகுந்த மதிப்பும் நம்பகத்தன்மையும் பெறுகிறது. * கவிதையான தலைப்பும் அட்டைப்படப் புகைப்படமும் * ஒரு ஆய்வு நூலுக்கு உரிய நேர்த்தியான மொழி நடையும், கருத்தாழமும் அதை அனுமதித்த ஆழி பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவும் பாராட்டுக்குரியது. இன்னும் பல துறை வல்லுனர்களை அடையாளம் கண்டு இது போன்ற நூல்களைப் பதிப்பகங்கள் கொண்டு வர வேண்டும். மேம்பாட்டு ஆலோசனைகள்: * அடிக்கடி வரும் எழுத்துப் பிழைகள், ஒரே கருத்துக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தந்ததை, சொன்ன கருத்தே திரும்பத் திரும்பச் சொல்லுவது போல் உள்ளதை ஆசிரியர் குழு தவிர்த்திருக்கலாம். *  உயர் கல்வி, திறன் பெற்று வெளிநாட்டில் பணி புரிவோரின் பணியிட, உளவியல், குடும்பச் சிக்கல்கள் குறித்தும் எழுதி இருக்கலாம். * அரபு நாடுகளில் எப்படி பணியாளர்கள் குறுகிய இடங்களில் வாழ்கிறார்கள் என்பது போன்ற பொருத்தமான இடங்களில் படங்கள் சேர்த்திருக்கலாம். வலைப்பதிவுகளில் இருந்து பதிப்புலகுக்குச் சென்றிருக்கும் திரு, மென்மேலும் பல நூல்களை எழுதவும் வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துகிறேன். *** திரை கடலோடியும் துயரம் தேடு, 152 பக்கங்கள். இந்திய ரூபாய் 90. ஆழி பதிப்பகம், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24. தொலைபேசி – 044 4358 7585

திரை கடலோடியும் துயரம் தேடு