இணையம் தமிழை வளர்க்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம். ஆனால், அதே வேளை தமிழில் எழுதுவது குறித்த குறைந்தபட்ச அறிவு, பயிற்சி, பொறுப்பு இல்லாதவர்கள் தமிழைக் கழுத்தை அறுக்காத குறையாக குதறிக் கொலை செய்யும் கொடுமை இன்னொரு புறம். இப்படி இணையத்தில் அடிக்கடி காணப்படும் தமிழ்க் கொலைகளை இந்த இடுகையில் ஆவணப்படுத்தி வைக்க விரும்புகிறேன்.
தமிழ்க் கொலை
March 7th, 2008 · 1 Comment · தமிழ்
Tags:தமிழ்·தமிழ் இலக்கணம்·தமிழ்க் கொலை·தமிழ்நாட்டில் தமிழ்·தமிழ்ப் பலுக்கல்
உனக்கு English தெரியாதா?
March 7th, 2008 · 10 Comments · தமிழ்
ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.
Tags:ஆங்கிலம்·சமூகம்·தமிழர்·தமிழ்·தமிழ்நாடு·தமிழ்நாட்டில் தமிழ்·மொழி