ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா?

பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த அளவு எடுப்பதில்லையே? அதிலும், ஆங்கில வழிய மாணவர்களைக் காட்டிலும் தமிழ் வழிய மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுக்கிறார்களே, ஏன்?

கல்வி – திருக்குறள் உரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391 படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்.. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392 எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 393 படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே [...]

PhD, University Research Student Life abroad Vs India, Admission, Funding

நண்பர் ஒருவர் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து மடலில் கேட்டிருந்தார். அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கீழே: – நண்பர்: எனக்கு ஒரு தகவல் வேணும்.. நீங்க ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீங்க இல்லையா, இதுக்கான செலவெல்லாம் எப்படி? – எல்லாமே உங்க கைக்காசா? இல்லை அரசாங்க / பல்கலைக்கழக உதவி ஏதாச்சும் இருக்கா? அப்படி அரசாங்க உதவி உண்டுன்னா, உங்க படிப்புக்கு மட்டுமே இருக்குமா? அல்லது மற்ற செலவுகளுக்கும் தருவாங்களா? அமெரிக்கா மாதிரி research assistant/ teaching [...]

முன்சன் தமிழாலயப் பள்ளி

2005 நவம்பர் முதல் 2006 ஜனவரி வரை ஜெர்மனியின் முன்சன் நகரில் உள்ள தமிழாலயப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளில் தமிழ்ப் பாடம் சொல்லித் தந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். பெரும்பாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், அதுவும் நன்கு படித்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுடன் ஒப்புக்கு ஓரிரு சொற்கள் பேசுவதுடன் ஒதுங்கிக் கொள்வது தான் வழக்கம் என்றும், இப்படி ஒருவர் நேரடியாக உதவ வந்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். இது [...]

தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?

எண்ணற்ற நுழைவுத் தேர்வுகள், அவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டியிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் உளைச்சலைத் தருவதும், கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதும் உண்மைதான். எனவே நுழைவுத் தேர்வுகளை மொத்தமாக இரத்து செய்வது எளிமையான, நேரடியான, அனைவராலும் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகத் தெரியலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது பள்ளிக் கல்வித் தரத்தையும், தலைசிறந்த தொழிற்கல்விக்ககூடங்களில் நுழையும் மாணவர்களின் தரத்தையும் பாதிக்கும் என்பது உறுதி. [...]