ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

Entries Tagged as 'நாட்குறிப்பு'

தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

January 16th, 2008 · 4 Comments · தமிழ், நாட்குறிப்பு

என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:
Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:
குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?
அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.
எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு [...]

[Read more →]

Tags:····

கற்றது தமிழ்

November 26th, 2007 · 4 Comments · தமிழ், திரை, நாட்குறிப்பு

நான்காம் வகுப்பு படித்தபோது அப்பா சிறுவர் மலரை அறிமுகப்படுத்தித் தந்தார். அதன் பின், பாப்பா மலர், அம்புலி மாமா, தினகரன் வசந்தன், தினமணிக் கதிர், தினமணிச் சுடர், வாரமலர் என்று தொடங்கி எட்டாம் வகுப்பு படித்தபோது மு.வ.வின் 400 பக்க மண் குடிசை நாவலைப் படித்து முடித்த போது அப்பாவே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவ்வளவு bore அடிக்கும் நாவல் அது அது தான் நான் படித்த முதல் நாவல். அதன் பிறகு மு.வ, நா.பா, கல்கி, [...]

[Read more →]

Tags:·······

பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

August 18th, 2007 · 23 Comments · திரை, நாட்குறிப்பு

பள்ளிக்கூடம் - முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.
இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி [...]

[Read more →]

Tags:·······

PhD, University Research student Life abroad Vs India, Admission, Funding etc.,

June 1st, 2007 · 17 Comments · நாட்குறிப்பு

நண்பர் ஒருவர் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து மடலில் கேட்டிருந்தார். அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கீழே:

நண்பர்: எனக்கு ஒரு தகவல் வேணும்.. நீங்க ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீங்க இல்லையா, இதுக்கான செலவெல்லாம் எப்படி? - எல்லாமே உங்க கைக்காசா? இல்லை அரசாங்க / பல்கலைக்கழக உதவி ஏதாச்சும் இருக்கா? அப்படி அரசாங்க உதவி உண்டுன்னா, உங்க படிப்புக்கு மட்டுமே இருக்குமா? அல்லது மற்ற செலவுகளுக்கும் தருவாங்களா? அமெரிக்கா மாதிரி research assistant/ teaching assistant [...]

[Read more →]

Tags:········

in tamil alsoவா?

May 22nd, 2007 · 4 Comments · தமிழ், நாட்குறிப்பு

கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், தங்கி இருக்கும் இடத்தில் தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள்.
இது வரை கன்னடர்களுடன் பழகியதில்லை. ஒரே ஒரு மலையாளி மட்டும் தனியாகப் பழக நேர்ந்ததில் நல்ல நட்பு வாய்த்தது. ஆனா, நான்கைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடன் ஒட்டிப் பழகுவார்கள் [...]

[Read more →]

Tags:··

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

May 20th, 2007 · 13 Comments · நாட்குறிப்பு

நெதர்லாந்தில், இந்தியா குறித்து:
1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?
பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!
2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?
நான் சொல்றது - நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம [...]

[Read more →]

Tags:····

abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

April 29th, 2007 · 4 Comments · நாட்குறிப்பு

அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான்

குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

[Read more →]

Tags:··

அம்மாபட்டித் தமிழ்

April 20th, 2007 · 4 Comments · தமிழ், நாட்குறிப்பு

அம்மாபட்டி - நான் 10 வயது முதல் 17 வயது வரை வளர்ந்த ஒரு மிகச் சிறிய ஊர். இப்பொழுதும் நாங்கள் குடி இருக்கும் ஊர். ஒரு 50 குடும்பங்கள் இந்த ஊரில் குடி இருக்கும என்று நினைக்கிறேன். இது போல் மாவட்டத்துக்குப் பல அம்மாபட்டிகள் உண்டு. திருச்சி, புதுகை, சிவகங்கை என மூன்று மாவடங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்திருக்கிறது.
மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று இருப்பது போல் நான் வளர்ந்த புதுகை, திருச்சி மாவட்டங்களில் ஒரு [...]

[Read more →]

Tags:·

நாடி ஜோசியம் !

April 18th, 2007 · 7 Comments · நாட்குறிப்பு

இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு.
போன உடன என் [...]

[Read more →]

Tags:···········

எத்தனை பேர்?

April 16th, 2007 · 2 Comments · நாட்குறிப்பு

இன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்?
நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்?
நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்?
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்?
அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்?
கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே என்று தருபவர்கள் எத்தனை பேர்? இலட்சக்கணக்கில் தந்த [...]

[Read more →]

Tags:·