Category: திருக்குறள்

  • ஊக்கமுடைமை – திருக்குறள் உரை

    ஊக்கமுடைமை – திருக்குறள் உரை உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று. 591 ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான். உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். 592 மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும். ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். 593 ஊக்கம்…

  • வினைத்திட்பம் – திருக்குறள் உரை

    வினைத்திட்பம் – திருக்குறள் உரை வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. 661 நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662 சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க…

  • செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் உரை

    செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் உரை. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை…

  • மக்கட்பேறு – திருக்குறள் உரை

    மக்கட்பேறு – திருக்குறள் உரை பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. 61 நல்ல அறிவாளி குழந்தைகளைப் பெறுவதை விட வேற கொடுப்பினை எதுவும் இல்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். 62 பழி இல்லாத நல்ல பண்பு உள்ள குழந்தைகளைப் பெத்தா, ஒருவருக்கு ஏழு பிறவியிலும் கெட்டதே நடக்காது. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். 63 ஒருத்தங்களோட குழந்தைங்க தான் அவங்களுக்கு சொத்து மாதிரி.…

  • கல்வி – திருக்குறள் உரை

    கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391 படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்.. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392 எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 393 படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே…

  • நீத்தார் பெருமை – திருக்குறள் உரை

    1.1.3. நீத்தார் பெருமை ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. 21 இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 ஆசை, விருப்பு, பிடிப்புகளை விட்டவங்க பெருமைய அளக்கிறது, உலகத்தில இது வரைக்கும் இறந்து போனவங்கள எண்ணுற மாதிரி இயலாத, முடியவே முடியாத செயல். இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்…

  • வான்சிறப்பு – திருக்குறள் உரை

    1.1.2 வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. 12 நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும். விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. 13 ரொம்ப நாள்…

  • கடவுள் வாழ்த்து – திருக்குறள் உரை

    1.1 பாயிரவியல் 1.1.1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 1 அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2 அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம்…

  • எளிய திருக்குறள் உரை

    எளிய திருக்குறள் உரை: 1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 7. மக்கட்பேறு 11. செய்ந்நன்றி அறிதல் 40. கல்வி 60. ஊக்கமுடைமை 67. வினைத்திட்பம் *** இப்படி ஒரு எளிய உரையை எழுதிப் பார்க்கத் தூண்டிய நண்பர் கார்த்திக்பாபுவுக்குகு நன்றி.