ஊர்: புதுகையில் உள்ள ஒரு சிற்றூர். என் அம்மா பிறந்த ஊர். மூன்று தாய் மாமாக்கள், எண்ணற்ற சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். படிப்பறிவற்றவர்கள் இல்லை. பலர் சிங்கப்பூர், மலேசியா என்று பிழைக்கச் சென்று உலக அனுபவம் பெற்றவர்களே.
எப்பொழுது: ஒரு சில நாட்கள் முன்னர். 2007 தான். 21 ஆம் நூற்றாண்டு தான். தமிழ்நாட்டில் தான்.
என்ன ஆனது:
நான் பிறந்த சாதியில் உள்ள அந்த ஊர்ப் பெண்ணும் இன்னொரு சற்றே ஒடுக்கப்பட்ட சாதிப் பையனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் [...]
Entries Tagged as 'சமூகம்'
சாதி
December 10th, 2007 · 9 Comments · சமூகம்
சிக்கோ
June 28th, 2007 · 6 Comments · சமூகம், திரை
சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.
மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் - கல்வி போன்ற [...]
Tags:ஆங்கிலத் திரைப்படம்·சிக்கோ·சினிமா·சினிமா விமர்சனம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·விவரணத் திரைப்படம்
உயிரின் விலை - இன்றைய சந்தை நிலவரம்
May 10th, 2007 · 6 Comments · சமூகம்
சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.
ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை [...]
Tags:செய்தி விமர்சனம்·தமிழ்நாடு·நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்
March 16th, 2007 · 5 Comments · சமூகம், நாட்குறிப்பு
முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.
“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”
காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.
“ரவிசங்கர்-னு வையுங்க”
“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”
“சரிண்ணே, netல பார்த்து சொல்றேன்”
வலையில தேடினப்புறம் தான் தெரியுது..இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. [...]
Tags:குழந்தைகள் பெயர்கள்·தமிழ்·தமிழ்நாடு·பெயர்கள்
தாய்மொழியை மறப்பது எப்படி?
March 16th, 2007 · No Comments · சமூகம், தமிழ்
- தாய்மொழியை மறக்கடித்து தேசிய மொழியைப் படிப்பது எப்படி ?
- மொழிகள் எப்படி அழிகின்றன, மொழியை ஏன் காக்க வேண்டும்?
தமிழார்வம், மொழியார்வம் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள இவை. இந்தக் கட்டுரைகளின் சாரத்தை தமிழில் தர ஆசை. ஆனால், எண்ணற்ற மொழியியல் சார் கலைச்சொற்களுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை தெரிந்தவர் உதவலாம். இன்னொரு நாள் முயன்று இக்கட்டுரையின் முக்கியக் கருத்துக்களைத் தர முயல்கிறேன்.
Tags:தாய் மொழி·தாய்மொழி·மொழி·மொழிகள்
தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?
January 21st, 2006 · 5 Comments · சமூகம்
எண்ணற்ற நுழைவுத் தேர்வுகள், அவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டியிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் உளைச்சலைத் தருவதும், கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதும் உண்மைதான். எனவே நுழைவுத் தேர்வுகளை மொத்தமாக இரத்து செய்வது எளிமையான, நேரடியான, அனைவராலும் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகத் தெரியலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது பள்ளிக் கல்வித் தரத்தையும், தலைசிறந்த தொழிற்கல்விக்ககூடங்களில் நுழையும் மாணவர்களின் தரத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.
தற்பொழுது [...]
Tags:கல்வி·செய்தி விமர்சனம்·தொழிற்கல்வி·நுழைவுத் தேர்வு
தமிழ்நாட்டில் கவிதை ரசனை
September 27th, 2005 · 30 Comments · சமூகம்
இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.
1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், [...]