Category: கவிதை

  • புதிய paper கவிதைகள் – தேவதை

    கேட்டது வரம். கிடைத்தது தேவதை. – இருக்கிற தேவதைக்காக இல்லாத சாமிகளையும் கும்பிடலாம். – தேவதையைக் காணவில்லை. கண்டுபிடிக்க வருவோருக்குத் தக்க தண்டனை வழங்கப்படும். – என்ன கேட்பது? ஏதாவது வரம் கேளேன் என்று உருகும் தேவதையிடம். – பி. கு: மார்கழிக் கோலம் போட தேவதை வருகிறாள்… 🙂 அவளுக்குக் காத்திருந்தது போலவே அவளுக்கான கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்…

  • நீ கடல் நான் நதி (பழைய paper கவிதைகள்)

    நீ கடல் நான் நதி உன்னைத் தேடி நான் வருவேன். நீ கடல் நான் நதி உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன். நீ கடல் நான் நதி உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும். நீ கடல் நான் நதி உன்னைச் சேரும் வழி நானறிவேன். நீ கடல் நான் நதி என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன். நீ கடல் நான் நதி உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன். நீ கடல் நான் நதி யாருக்கு…

  • பழைய Paper கவிதைகள் – கனவு !

    விழித்துக் கொண்டே இருக்கிறேன், கனவுகளில் நீ வரும்போது, உறங்கிவிடக்கூடாது என்பதற்காக. — உன்னை நல்ல குடும்பத்துப் பெண் என நினைத்திருந்தேன். எப்படி அனுமதிக்கின்றனர் உன் பெற்றோர்? இப்படி இருட்டிய பின்னும் கனவில் வர? — கும்மிருட்டு நிரம்ப பயம் எனக்கு. உன் படுக்கையறை விளக்கை அணைக்காதே. வருவதாய் இருக்கிறேன் இன்றிரவு, உன் கனவில். — உன் ஒன்றுவிட்ட சித்தப்பனுக்கெல்லாம் பயந்து பயந்து உன்னை சந்தித்தது போதும். கொஞ்சமாவது உறங்கிப் பழகு. கனவில் வருகிறேன்.

  • பழைய Paper கவிதைகள் – பிரிவு !

    சொல்லாமல் ஊருக்குப் போன நீ சொல்லிக் கொண்டு செத்தாவது போயிருக்கலாம். — உகாண்டாவில் வெயில் அதிகம். கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி. மூன்றாம் உலக நாடுகளில் வறுமை. எதன் பொருட்டு பார்க்க வந்தேன் என வினவும் உன் அம்மாவிடம் வேறு என்ன சொல்லச் சொல்கிறாய்? மனசு வலிக்குதுன்னா? — விரட்ட விரட்டத் திரும்ப வரும் உன் நாய்க்குட்டியை விட வெட்கங் கெட்டதாயும் உண்மையானதாகவும்.. உன் நினைவுகள் ! — தாமதமாய் வரும் மழைக்கும் கூட வலிக்குமோ என பச்சை காக்கும்…

  • பழைய Paper கவிதைகள் – பூ!

    வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால் என்ன செய்யும் பூ வாடாமல்? — சிகப்போ மஞ்சளோ ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா! குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் – என்னோடு சந்தோஷப்பட!

  • சொல்லலாம் தான்!

    நான் உன்னை பார்க்கிறேன். நீ என்னை பார்க்கிறாய். நம்மை யாருமோ யாரையும் நாமோ பார்த்ததாக நினைவில்லை. சொல்லலாம் தான்.. “ஏதாச்சும் பேசே” என்று.. என்றாலும், எத்தனை முறை தான் இதையே சொல்வது? “கோயிலுக்குப் போ” – பாட்டி; “கடைக்குப் போ” – அம்மா; “collegeக்குப் போ” – அப்பா; சொல்லலாம் தான்.. என்றாலும், யாருமே சொல்லாமல் யாருன்னை என் முன்னால் போகச் சொன்னது? மீன் போல் துள்ளுகிறாய். மான் போல் ஓடுகிறாய். குயில் போல் கதைக்கிறாய். அன்னம்…

  • ..என்றதெல்லாம் போதும்!

    வெட்டிப் பேச்சு வேண்டாம். “என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்; உன்னிடம் என்ன?” என்றதெல்லாம் போதும்! வேண்டுமானால் கேள். கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன். “உன் தங்கை அப்படியா, என் தம்பி இப்படியதாக்கும்..” என்றதெல்லாம் போதும்! இப்பொழுது அவர்கள் கூட இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள். “சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..” என்றதெல்லாம் போதும்! மிச்சமேதும் இல்லை என்னிடம் – ஈரிதழால் பேச. மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம் பார்த்து மருகிப் பின் “அப்புறம்..” என்றதெல்லாம் போதும்! மிச்சமேதும் இல்லை…

  • பழைய Paper கவிதைகள் – இனி !

    உன்னை எறும்பு கடிக்கும் தருணங்களில், சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து காரணம் கேட்பாய். மக்குப் பெண்ணே! உனக்கே தெரிய வேண்டாமா? You are so sweet! — எடுத்துக் காண்பிக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் தோழிகள் பெயரைச் சொல்லும் வெட்டி வேலையை விட்டு விடு. நேரிலோ புகைப்படத்திலோ நான் உன்னை மட்டுமே பார்க்கிறேன். — ஒரே பிள்ளையான உன்னை ஒழுங்காகக் கூட வளர்க்காமல் என்ன முறித்தனர் உன் பெற்றோர்? பெண் வளர்க்கச் சொன்னால் தேவதையை வளர்த்திருக்கிறார்கள் !…

  • சென்னையில் மாட்டு வண்டிகளுக்குத் தடை

    என் வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு – ஓடி வந்தால் 20 நிமிடங்கள் – Cycleஐ விரட்டினால் 8 நிமிடங்கள் – கோபியின் Scooterல் 4 நிமிடங்கள் இருந்தாலும், ரயிலோ விமானமோ விடச்சொல்லி மனு கொடுத்ததில் கூச்சமில்லை எனக்கு. சிரிக்காமல் மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரியும் ஒருவேளை காதலித்திருந்தால் தெரியும் – வெட்கங்கெட்டு உன்னகம் பாயும் என் மனதுக்கு மட்டும் இன்னும் வரையறுக்கப்படவில்லை. போவதற்கான குறைந்தபட்ச நொடிகளும் வந்து சேர்வதற்கான அதிகபட்ச யுகங்களும். — முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_7411.html என்ற…

  • பொது இடத்தில் முத்தமிடலாமா?

    ஒழுங்கு மரியாதையாய் – ஒரு முறை நான் கேட்ட – உன் பத்தாம் வகுப்புப் புகைப்படத்தையே தந்திருக்கலாம். ஒரு நாளுக்கு ஒரு முறையோ பத்து முறையோ கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்ப்பதில் ஒரு கஷ்டமும் இருந்திருக்காது எனக்கு. படிய வாரிய கூந்தலுடன் ரயிலேறும் வரை நிதானித்த அழகிய மௌனமும் ஆரத்தழுவிய முத்தத்தில் கலைந்திருக்காது.