ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

Entries from April 2008

கூகுள் X கூகுல்

April 25th, 2008 · 3 Comments · தமிழ்

ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.
a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.
அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு
பி.கு - சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் [...]

[Read more →]

Tags:·····

புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்

April 25th, 2008 · 6 Comments · wordpress

1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.
இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக தேவையான வார்ப்புரு, நீட்சி மாற்றங்களைச் செய்ய, நீட்சிகளை இற்றைப்படுத்த உதவும்.
2. நிரந்தரத் தொடுப்பை [...]

[Read more →]

Tags:···

வட்டார வழக்குத் தமிழ்

April 24th, 2008 · 6 Comments · தமிழ்

தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது :( இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.

[Read more →]

Tags:······

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை

April 21st, 2008 · 1 Comment · திருக்குறள்

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க [...]

[Read more →]

Tags:······

வினைத்திட்பம் - திருக்குறள் உரை

April 21st, 2008 · No Comments · திருக்குறள்

வினைத்திட்பம் - திருக்குறள் உரை
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.
கடைக்கொட்கச் [...]

[Read more →]

Tags:········

செய்ந்நன்றி அறிதல் - திருக்குறள் உரை

April 17th, 2008 · No Comments · திருக்குறள்

செய்ந்நன்றி அறிதல் - திருக்குறள் உரை.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101
நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102
என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை விட பெரிசு.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் [...]

[Read more →]

Tags:··

மக்கட்பேறு - திருக்குறள் உரை

April 17th, 2008 · No Comments · திருக்குறள்

மக்கட்பேறு - திருக்குறள் உரை
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61
நல்ல அறிவாளி குழந்தைகளைப் பெறுவதை விட வேற கொடுப்பினை எதுவும் இல்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62
பழி இல்லாத நல்ல பண்பு உள்ள குழந்தைகளைப் பெத்தா, ஒருவருக்கு ஏழு பிறவியிலும் கெட்டதே நடக்காது.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63
ஒருத்தங்களோட குழந்தைங்க தான் அவங்களுக்கு சொத்து மாதிரி. ஆனா, அது எந்த அளவு மதிப்பு உள்ளதுங்கிறத அந்தக் குழந்தைகளோட செயல்களை [...]

[Read more →]

Tags:··

கல்வி - திருக்குறள் உரை

April 17th, 2008 · No Comments · திருக்குறள்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391
படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்..
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393
படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394
மனசு மகிழ்ந்து சந்திச்சு, “இனி எப்ப திரும்பப் பார்ப்போம்”னு ஏங்கிப் [...]

[Read more →]

Tags:··

ஸ்ரீ X சிறீ X சிரீ

April 10th, 2008 · 1 Comment · தமிழ்

திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம்

[Read more →]

Tags:·········

கூகுளுக்குத் தமிழ் தெரியாது

April 10th, 2008 · No Comments · தமிழ், வலைப்பதிவு

இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. பல சமயங்களில் அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.

[Read more →]

Tags:····