நிலவேம்பு விற்பனை

நிலவேம்பின் பக்க விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தால், நிலவேம்புக் குடிநீர் என்பது மேலும் எட்டு வகையான மூலிகைகள் கலந்த நீர் என்கிறார்கள். ஆனால், கடைகளிலோ நிலவேம்புப் பொடி, பவுடர், குடிநீர் என்று வெவ்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனையாவதைக் கீழே காணலாம். வெறும் நிலவேம்புப் பொடியை வாங்கி மக்கள் கரைத்துக் குடித்தால் வரும் விளைவுகள் என்ன? எந்த வித தரக்கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் இல்லாமல் இப்படி விற்பனையாகும் பொருள்களில் கலப்படம் இல்லை என்பதற்கு என்ன உறுதி?

புரதம், மாவுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது, சக்தி தரும், தெளிவான புத்தி தரும் என்று விளம்பரப்படுத்தப்படும் இது உணவா மருந்தா? இது எப்படி டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும்?

காண்க – முகநூல் உரையாடல்